<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தன்னம்பிக்கை</title>
	<atom:link href="http://www.thannambikkai.net/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.thannambikkai.net</link>
	<description>Thannambikkai (தன்னம்பிக்கை) Magazine (மாத மலர்) Website</description>
	<lastBuildDate>Wed, 10 Mar 2010 10:55:16 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/10/3754/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/10/3754/#comments</comments>
		<pubDate>Wed, 10 Mar 2010 10:19:37 +0000</pubDate>
		<dc:creator>ஆசிரியர் குழு</dc:creator>
				<category><![CDATA[Articles]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3754</guid>
		<description><![CDATA[-  கோவை பயிலரங்கம்
கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா            மையம் மற்றும் ஸ்டார்ஸ் ஜெராக்ஸ் இணைந்து நடத்திய   2010 பிப்ரவரி மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம், &#8216;எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி&#8217; என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பயிலரங்கத்திற்கு தன்னம்பிக்கை வாசகர் வட்ட தலைவர் பொறியாளர் ஏ.ஜி.மாரிமுத்துராஜ் தலைமை தாங்கிப் பேசினார். தன்னம்பிக்கை வாசகர் வட்ட கௌரவ தலைவர் அருள்நிதி ஒஸ்ரீ ந.ங.பன்னீர் செல்வம் அவர்கள் மிகச் சிறப்பான துவக்க உரையை நிகழ்த்தினார்.
புதிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>-  கோவை பயிலரங்கம்</strong></p>
<p>கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா            மையம் மற்றும் ஸ்டார்ஸ் ஜெராக்ஸ் இணைந்து நடத்திய   2010 பிப்ரவரி மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம், &#8216;எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி&#8217; என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.<span id="more-3754"></span></p>
<p>பயிலரங்கத்திற்கு தன்னம்பிக்கை வாசகர் வட்ட தலைவர் பொறியாளர் ஏ.ஜி.மாரிமுத்துராஜ் தலைமை தாங்கிப் பேசினார். தன்னம்பிக்கை வாசகர் வட்ட கௌரவ தலைவர் அருள்நிதி ஒஸ்ரீ ந.ங.பன்னீர் செல்வம் அவர்கள் மிகச் சிறப்பான துவக்க உரையை நிகழ்த்தினார்.</p>
<p>புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பகுதியிலே இந்த மாதம் குறும்பட இயக்குனர் திரு. ச.சு. என்கின்ற, சண்முக சுந்தரம் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மிகச்சிறப்பான இரு சமூக சிந்தனையை வளர்க்கும் படங்கள் திரையிடப்பட்டது.</p>
<p>கோவையைச் சேர்ந்த, பிரபலமான மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், பல்வேறுபட்ட தலைப்புக்களிலே பயிலரங்கங் களை நடத்தி, மக்கள் மத்தியிலே தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ள திரு.சூரியன் அவர்கள் சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு திரளாக பங்கேற்ற வாசகர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நல்லதொரு பயிற்சியை அளித்தார்.</p>
<p>அனைவரிடமும் தேவைக்கு அதிகமான திறமைகள் இருக்கின்றன என்றும், அதை யாரும் முழுமையாக பயன்படுத்து வதில்லை; முயற்சி செய்தால் எதுவும் முடியாதது இல்லை என்றும் பல மாணவர்கள், தனக்கு தெரிந்த விசயங்களைக்கூட நடைமுறைப்படுத்துவதில்லை அதனால் அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றார்கள், அடுத்தவர்கள் அதிக மதிப்பெண், வாங்குகின்றபோது, ஏன் நம்மால் வாங்க முடியாது என்று நினைப்பதும் இல்லை. நம்மாலும் முடியும் என்ற அந்த தன்னம்பிக்கை வருமானால் அவர்களாலும் அது முடியும்.</p>
<p>தேர்வுக்கு தயார் ஆவதற்கு முன்பு, மாணவர்கள் தன்னிடம் இருக்கும் பயத்தை முதலில் நீக்க வேண்டும். பயம் எப்போது நீங்கும் என்றால் அவர்கள் படிப்பதை திரும்ப, திரும்ப தனது மூளையிலே பதிவு செய்யும்போது படித்ததை மனகாட்சியாக மறுபடி, மறுபடி, பார்க்கின்ற போது ஓரிரு முறை எழுதி பார்க்கின்ற போது மீண்டும் படித்ததை ஒருமுறை படித்து பார்ப்பார்களே ஆனால், அந்த பயம், அவர்களிடம் இருந்து போகும். இந்த பழக்கம் தொடரும்பொழுது குறைந்த நேரத்தில் அதிக பாடங்களைப் படித்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்றார்.</p>
<p>பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தொடர்ந்து கட்டளை இட்டுக் கொண்டே இருக்கக்கூடாது குழந்தைகளை பொறுப்புக்களை ஏற்கத்தூண்ட வேண்டும். தவறு செய்கின்ற போது அதனால் விளையும் விளைவுகளை அவர்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டும், முடிந்த மட்டும் அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் எல்லா வகையிலும் உதவி செய்வோம் என்ற எண்ணத்தை அவர்களின் மனத்திலே பதிய வைக்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் ஒரு சங்கல்ப்ப பயிற்சி கொடுத்தார்.</p>
<p>என்னால் முடியும், நான் தன்னம்பிக்கையாளன், நான் வெற்றியாளன், நான் தைரியசாலி, நான் அன்பானவன், நான் ஆற்றல் மிக்கவன், என்னால் முடியும், என்னால் முடியும்.</p>
<p>என்று ஐந்து முறை அனைவரையும் சொல்லச் சொல்லி வந்திருப்போரின் கேள்விகளுக்கு பதிலளித்து தனது சிறப்பான பயிற்சியை நிறைவு செய்தார். இறுதியாக பயிலரங்கம் நன்றி நவில, நாட்டுப்பண் இசைக்க இனிதே நிறைவு பெற்றது.</p>
<p>குறிப்பு : அருள்நிதி ஒஸ்ரீ ந.ங.பன்னீர் செல்வம் அவர்கள் எழுதிய &#8220;செல்வமும், சிறப்பும் உங்களுக்கே&#8221; என்ற புத்தகத்தை சூரியன் அவர்கள் வெளியிட டாக்டர் திரு.அறிவழகன் பெற்றுக்கொண்டார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/10/3754/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யார் நல் மனிதன்?</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/10/3738/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/10/3738/#comments</comments>
		<pubDate>Wed, 10 Mar 2010 07:08:59 +0000</pubDate>
		<dc:creator>பாலா</dc:creator>
				<category><![CDATA[Articles]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3738</guid>
		<description><![CDATA[- பாலா
அவர் பெயர் ரத்தினம். திரைப்பட                  இயக்குநர். பல வெற்றிப் படங்களைத் தந்தவர். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெரும் படை அவரை மொய்த்துக் கொண்டேதான் இருக்கும்.  காரணம் என்வென்றால், ரத்தினத்தை அடைந் தால் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாய் இருந்தனர்.
இன்று ரத்தினத்தின் புது திரைப்படம் வெளியாகிறது.  எல்லோரும் பெரும் ஆவலுடன் காத்திருந்து எதிர்ப்பார்த்த திரைப்படம். அதிகாலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் படத்தின் முதல் விமர்சனத்தை எதிர்பார்த்திருந்தார்.  அப்போது அவரது உதவி இயக்குநர் ஒருவர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>- பாலா</strong></p>
<p>அவர் பெயர் ரத்தினம். திரைப்பட                  இயக்குநர். பல வெற்றிப் படங்களைத் தந்தவர். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெரும் படை அவரை மொய்த்துக் கொண்டேதான் இருக்கும்.  காரணம் என்வென்றால், ரத்தினத்தை அடைந் தால் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாய் இருந்தனர்.<span id="more-3738"></span></p>
<p>இன்று ரத்தினத்தின் புது திரைப்படம் வெளியாகிறது.  எல்லோரும் பெரும் ஆவலுடன் காத்திருந்து எதிர்ப்பார்த்த திரைப்படம். அதிகாலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் படத்தின் முதல் விமர்சனத்தை எதிர்பார்த்திருந்தார்.  அப்போது அவரது உதவி இயக்குநர் ஒருவர் வந்து. &#8220;சார் உங்கள பார்க்க புது புரொடியூஸர் அசோக் லால் வெய்ட் பண்ணிட்டு இருக்காரு!&#8221; என்றவருக்கு பதிலாய், &#8220;டேய்! மனுசன் இங்க என்ன டென்ஷன்ல இருக்கான். இப்ப போய்…. புரெடியூஸர், காக்கா குருவின்னுட்டு…. போடா, போயிட்டு அப்புறமா வரச் சொல்லு! காலங் காத்தால வந்தறானுங்க….&#8221; என்று பொறிந்து தள்ளினார்.  அப்போது ரத்தினத்தின் கைபேசி அலறியது.</p>
<p>&#8220;ஹலோ! சொல்லுடா மோகன்…… என்னாச்சு?&#8221; எனக் கேட்டார், ரத்தினம் ஆவலுடன் &#8220;சார்!ஸாரி சார்…. படத்தோட ரிசல்ட் நெகடிவ்… ஓடாது சார்! நெக்ஸ்ட் ஷோக்கு மட்டும் கூட்டமிருக்கும்…… அப்புறம் கஷ்டங்கறாங்க டிஸ்டிரிபூயுட்ர்ஸ்…. ஸாரி சார்!&#8221; என்ற பதில் வந்தது. துவண்டு போனார் ரத்தினம்! தனது வாழ்நாளிலே அதிகப்படியான செலவு செய்து தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் இது.  அதன் தோல்வியினை ஏற்கமுடியாமல் தவித்தார். கண்ணீர் துளி நிரம்பியது.  புகைப் பெட்டி தேடி அலைந்தது அவர் கைகள்.  &#8220;டேய் கிகரெட் பேக்கட் எங்கடா வெச்சீங்க….&#8221; என்று உரக்க கத்தினார்.  அவர் குரலுக்கு பதிலளிக்க கூட எவருமில்லை.  வெளியே வந்து பார்த்தார்  அங்கிருந்த கூட்டம் களைந்து வெளியேற ஆரம்பித்தது. அதில், ஒருவர், &#8220;இத்தன நாள் ஆடுனான் இல்ல… இப்ப சரியான பதில் கெடச்சிருச்சு! ஆண்டவன் இருக்காண்டா!&#8221; மற்றொரு குரல், &#8220;நம்ம கிட்ட வேலை வாங்க என்னம்மா திட்டினான்?! இப்பப் பாரு! அவன் பாடு பாக்கக் கூட யாருமே கெடையாது!&#8221; என்று சிரித்தது. &#8220;ரெண்டு படம் ஓடிறகூடாதே… உடனே ஆரம்பிச்சிடுவானுங்க……&#8221; என்றது இன்னொரு குரல்.</p>
<p>அன்று இரவு தனிமையில் கடற்கரை யோரம் அமர்ந்திருந்தார் ரத்தினம். கைபேசி அலரிக்கொண்டே இருந்தது. அதனை அமைதிப் படுத்தினார். ஒரு சாதாரண மனிதனாக, எந்தவொரு பந்தாவுமில்லாமல், திரைப்பட போதையில்லாமல் தனித்திருந்தார்.  அப்போது அவரினுள் ஓர்குரல் பேசத் தொடங்கியது.</p>
<p>நாம புகழோட இருக்கும் போது எத்தன கூட்டம் நம்ம சுத்தி…… இப்போ ஒரு தோல்வி வந்ததும் அந்த கூட்டமெல்லாம் எங்க போச்சு…&#8221; அவரது கண்முன்னே திரைப்பட அனுபவங்கள், விருதுகள், பாராட்டுக்கள் என்று எண்ணற்ற எண்ண அலைகள் திரையிட்டுச் சென்றன.  அப்போது &#8220;சார்! கடலை சாப்பிடுறீங்களா? சூடா கடலை சார்! சூப்பரா இருக்கும் சார்……&#8221; என்றான் ஒருவன். சட்டென்று யோசனைகள் எல்லாம் களைந்து எழுந்தார் ரத்தினம்.  கடலை விற்பவனை பார்த்து, &#8220;ம்ம்ம்…எவ்வளோப்பா?&#8221; என்ற ரத்தினத் திற்கு பதிலாய், &#8220;ஒரு பாக்கெட் ரெண்டு ரூபா சார்!&#8221; என்றான். வாங்கி சாப்பிட ஆரம்பித்தார். சிந்தனைகள் மீண்டும் தொடர்ந்தது. &#8220;எத்தன அசிஸ்டென்ஸ், அவுங்களுக்கெல்லாம் வேலை போட்டு கொடுத்தேனே… இப்போ அவுனுங்க கூட யாரையுமே காணோமோ……&#8221; என்று மனம் வருந்தியபடி அந்தக் கடலை பொதித்து வந்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தார்.  இருட்டில் எதுவும் தெரியவில்லை.  தனது காரினுள் சென்று, வெளிச்சமிட்டு அந்தக் காதிதத்திலுள்ள எழுத்துக்களைப் படித்தார்.  அது ஏதோ ஒரு சிறு குழந்தையின் கிறுக்கல்கள் போலிருந்தது உன்னிப்பாய் படித்தார்.</p>
<p>&#8216;மூளைகள் பல சேர்த்து வெற்றி கண்டவன்</p>
<p>இன்று அறிவாளி&#8230;</p>
<p>என்றோ ஒரு நாள் முட்டாள்!</p>
<p>இதயங்கள் பல சேர்த்து வெற்றி கண்டவன்</p>
<p>இன்றும் என்றும் நல்மனிதன்&#8230;</p>
<p>எப்போதும் அவன் இனியவன்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/10/3738/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சாதிக்கும் வல்லமையை வெளிப்படுத்து! 		சரித்திரத்தில் உன் பெயர் எழுது!!</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3735/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3735/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 06:45:01 +0000</pubDate>
		<dc:creator>டாக்டர். பெரு. மதியழகன்</dc:creator>
				<category><![CDATA[Cover Story]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3735</guid>
		<description><![CDATA[ &#8211; திரு. வே. சந்திரசேகரன்
நிறுவனர், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள்
நேர்முகம்: &#8216;கலைமாமணி&#8217; டாக்டர் பெரு. மதியழன்
திருச்செங்கோடு குமரமங்கலம் வேலுச்சாமி &#8211;           கமலம்மாள் தம்பதியினருக்கு மகனாகப்     பிறந்தவர், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், திரு வெ. சந்திரசேகரன் அவர்கள். 
ஆசிரியப் பயிற்சிப் படிப்பை முடித்து 1967 முதல் 1990 வரை துவக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தர்மபுரி மாவட்ட செயலாளராக 21 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.
அறிவு விளக்கை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong> &#8211; திரு. வே. சந்திரசேகரன்</strong></p>
<p>நிறுவனர், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள்</p>
<p>நேர்முகம்:<strong> &#8216;கலைமாமணி&#8217; டாக்டர் பெரு. மதியழன்</strong></p>
<p>திருச்செங்கோடு குமரமங்கலம் வேலுச்சாமி &#8211;           கமலம்மாள் தம்பதியினருக்கு மகனாகப்     பிறந்தவர், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், திரு வெ. சந்திரசேகரன் அவர்கள். <span id="more-3735"></span></p>
<p>ஆசிரியப் பயிற்சிப் படிப்பை முடித்து 1967 முதல் 1990 வரை துவக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.</p>
<p>தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தர்மபுரி மாவட்ட செயலாளராக 21 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.</p>
<p>அறிவு விளக்கை கல்வியின் மூலம் எல்லோருக்கும் வழங்கிட வேண்டும் என விருப்பம் கொண்டு 1987ல் வித்யா மந்திர் பள்ளி, 2000-ல் கலைக்கல்லூரி,</p>
<p>2004-ல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, 2006-ல் கல்வியியல் கல்லூரி எனத் துவக்கி சாதித்து வருபவர்.</p>
<p>பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அத்தனை யிலும் திறம்பட செயல்பட்டு பிறர் போற்ற  வாழ்ந்து வருபவர்.</p>
<p>பாசம் அமைப்பின் செயலர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு தனியார் மற்றும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலேசன் பள்ளிகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்.</p>
<p>சிறந்த கல்விச்சேவைக்கான கவர்னர் விருது மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான</p>
<p>விருது இன்னும் பல சாதனை விருதுகளை குவித்திருப்பவர்.</p>
<p>2008-2009 மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளியாக வித்யாமந்திர் பள்ளியை உயர்த்தி சிகரம் தொட்டிருப்பவர்.</p>
<p>சமுதாயப் பணிகளை பிறர் வியக்கும் வண்ணம் அதிகம் செய்து வருபவர். இனி அவருடன் நாம்&#8230;.</p>
<p><strong>வித்யா மந்திர் பள்ளியை மேல்நிலை பொதுத்  தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் பள்ளியாக சாதித்த வரலாற்றைச் சொல்லுங்கள்?</strong></p>
<p>பள்ளி ஆரம்பித்த 1987 ஆம் ஆண்டு முதலே உருவான எண்ணம் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை.  பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர் களும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் மிகக் கடுமையாக உழைத்தனர். இதில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அயராத சலியாத ஒத்துழைப்பு முக்கிய காரணியாகும்.  1997-இல் முதன் முறை மெட்ரிக் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதினர் எமது மாணவர்கள்.  அதில் N. பாலாஜி என்ற மாணவன் 1007 மதிப்பெண் பெற்று தருமபுரி கல்வி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் என அறிவிக்கப்பட்டான்.  இது எமது ஆசிரியர் மற்றும் மாணவர்களின் 10 ஆண்டு உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.  1999-இல் +2 தேர்வில் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங் களைப் பிடித்து N. பாலாஜி மற்றும்</p>
<p>G. கார்த்திகேயன் என்ற இரு மாணவர்கள் அன்றைய மற்றும் இன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் பாராட்டுப் பெற்றனர்.  அதே 1999 ஆண்டு செல்வி C. ஜெனிதா என்ற மாணவி 10ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துச் சாதனை செய்தாள். மீண்டும் +2 தேர்வில் 2001-ல் தருமபுரி மாவட்டத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்து மாணவர்கள் சாதனை செய்தனர்.  அதே ஆண்டு R. கோமதி என்ற மாணவி இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 200/200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தாள். 2002-ல் L. ஆனிரோஸ் என்ற மாணவி தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தாள். 2003-ல் S.சுரேஷ் என்ற மாணவன் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.  2003-ல் V. நந்தினி என்ற மாணவி மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றாள். அதே ஆண்டு மேலும் N.S. சரண்யாதேவி, J. உதயகுமார் ஆகிய இருவர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றனர்.  2005-ல் S.A. ஆயிஷா என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தாள். 2006-ல் G. பானுப் பிரியா என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றாள். மீண்டும் 2009-ல்</p>
<p>S. பால முருகன் என்ற மாணவன் மாநிலத்தில் முதல் இடத்தையும், K.C. சிஞ்சு என்ற மாணவி மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.</p>
<p>இவ்வாறு தொடர்ந்து பல ஆண்டுகள் கடுமையாக உழைத்துத்தான் மாநில அளவில் முதல் இடம் பிடிக்க முடிந்தது.</p>
<p><strong>அரசு பள்ளி ஆசிரியராக, ஆசிரியர் கூட்டணி யின் தலைசிறந்த மாவட்ட தலைவராக மலர்ந்த உங்கள் வாழ்வின் திருப்பு முனையாக எதைக் கருதுகிறீர்கள்?</strong></p>
<p>1967-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகம் இருந்தது.  அவர்கள் கல்வித்தரம் பற்றிக் கவலைப்படாமல் கற்பித்தல் அன்றி ஏனைய பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் துவக்கக் கல்வியைப் பாழ்படுத்தினர்.  இவைகளை எதிர்த்து ஆசிரியர் கூட்டணி இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். நானும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தருமபுரி மாவட்டச் செயலராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தேன்.  அன்றைய தினம் ஆசிரியர்கள் மத்தியில் எழுச்சியும் ஒற்றுமையும் தைரியமும் ஏற்படக் காரணமாக இருந்தவர் திரு. செ. முத்துசாமி Ex.M.L.C என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p>துவக்கப் பள்ளிகளின் கல்வித்தரத்தை எத்தனை முயன்றும் தலைமை ஆசிரியராக நான் பணியாற்றிய பள்ளியிலேயே உயர்த்த இயலவில்லை.  அதுவன்றி அன்றைய மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் இவை பற்றிக் கவலைப்படாமல் இருந்தமையால் அவர்களுடன் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக மெட்ரிக் பள்ளி ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p>
<p><strong>மிகவும் பிற்பட்ட கிராமப்புறத்தில் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்துத் தொண்டாற்றி வருகிறீர்கள். இத்தகைய சேவையில் ஆர்வம் தோன்றியது எப்படி?</strong></p>
<p>எந்த இடத்திலும் உண்மையான உழைப்பு இருந்தால் உயர்வடைய முடியும் என்பதை நிரூபிப்பது எங்கள் பள்ளியின் சாதனை என்றே குறிப்பிடலாம். கல்வியில் மிகப் பின்தங்கிய பகுதி ஊத்தங்கரை. இப்பகுதியிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கில்லை. மேலும் ஆசிரிய னாக உள்ள நம்மால் ஒரு பள்ளியை உருவாக்க முடியுமா? என்ற உள்ளுணர்வுக்கு வடிகாலாக அமைந்ததுதான் இப்பள்ளி.  இதனைத் துவக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் நல்மனம் படைத்த கொடையாளர்களும் ஆதரவுக் கரம் நீட்டியதால்தான் இதனைத் துவக்க முடிந்தது.</p>
<p><strong>வழக்கமாக பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்குகள் பல்கலைக் கழங்களில் அல்லது நகரங்களில் உள்ள பெரிய கல்லூரிகளில் மட்டுமே நடை பெறும். தங்கள் கல்லூரியிலும் சமீபத்தில் நடை பெற்றது. அந்த அளவுக்கு உங்கள் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா?</strong></p>
<p>பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்து வதற்கு தேவையான பெரிய அளவு வசதிகள் எமது கல்லூரியில் இல்லையென்றாலும் குக்கிராமத்தில் அமைந்துள்ள எமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்த முன்வந்தது பேராசிரிய முனைவர் க.ப. அறவாணன் அவர் களின்  பெருந்தன்மை. அத்துடன் எனது நண்பர் பேராசிரியர் பழனியாண்டி அவர்களின் ஊக்க மும் ஆக்கமும் தான் எங்களால் பன்னாட்டுக் கருத்தரங்கை ஓரளவு சிறப்பாக நடத்த முடிந்தது.</p>
<p><strong>ஊற்றங்கரைப் பகுதியில் உங்களின் சாதிப்பாக நீங்கள் கருதுவது?</strong></p>
<p>சாதிப்பு என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் செய்துவிடவில்லை. இப்பகுதி அரசு பள்ளிகளிலும் கல்வித் தரம் உயரவேண்டும் என்பதற்காக சிறுசிறு உதவிகள் செய்துள்ளோம். ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் களை ஒருங்கிணைத்து ரூபாய் ஒரு கோடி அளவுக்கு நிதி உதவி பெற்று மின்னணு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>மேல்நிலை இரண்டாமாண்டு (+2) முடிக்கும் மாணவர்களுக்கும் இன்றைய தலைமுறைக்கும் தாங்கள் கூறுவது என்ன?</strong></p>
<p>மாணவர்கள் தான் நாளைய இந்தியா என்பதை மாணவர்களில் பெரும்பாலோர் உணர்ந்துள்ளனர். தனிப்பட்ட ஒவ்வொரு மாணவனின் உயர்வும் நமது நாட்டின் உயர்வு என்பதை மாணவர்கள் உணர்ந்துள்ளனர்.  இன்றைய மாணவர்கள் இயல்பாகவே ஊக்கமும் ஆக்கமும் பெற்று விளங்குவதால் அவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை.</p>
<p><strong>கல்விக்காகத் தங்களின் வருங்கால திட்டங்கள் என்ன?</strong></p>
<p>பள்ளிக்கல்வியை மேலும் சிறப்பான தாகவும் பயனுள்ளதாகவும் மாற்றவேண்டும்.  பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் தரமான சிறப்பான கல்வி அறிவு பெறவேண்டும்.  கல்லூரியானது பண்பட்ட அறிவிற் சிறந்த மாணவர்களை உருவாக்குவதாக அமைய முயல்வோம்.</p>
<p><strong>பள்ளிக் கல்வியில் சாதனை படைத்து வரும் உங்களுக்கு கல்லூரி மீதான பார்வை வரக் காரணம் என்ன?</strong></p>
<p>கல்வியின் மேன்மை என்பது உயர் கல்வியின் சாதனை தான்.  சிறந்த பள்ளிக்கல்வி பெற்ற மாணவன் கூட உயர் கல்வி சிறப்பாகக் கிடைக்கவில்லையெனில் வாழ்க்கையில் தோல்வி அடைவது நிதர்சணம்.  எனவே தான் கல்லூரி ஆரம்பிக்க வேண்டிய சூழல் உண்டானது.</p>
<p><strong>மாணவர்களின் சாதனைகள் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?</strong></p>
<p>இன்றைய மாணவர்களின் அறிவாற்றல், கடின உழைப்பு, எதிர்காலம் குறித்த தெளிவான சிந்தனை ஆகியவை மாணவர்களின் உயர்ந்த பட்ச சாதனை என நான் கருதுகிறேன்.  மேலும் பாடங்களைப் படித்து அனைத்தையும் நினைவில் நிறுத்தி எல்லாப் பாடங்களிலும் முழுமையான மதிப்பெண்கள் பெறுவது மாணவர்களின் மகத்தான சாதனை என்று குறிப்பிடலாம்.</p>
<p><strong>கல்விச் சேவைக்காக நீங்கள் பெற்ற விருது களில் மறக்க முடியாத விருது இது என்று கருதுவது?</strong></p>
<p>கல்விச் சேவையினால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் பெற்றுள்ள மனமார்ந்த மரியாதையும் அவர் களின் அன்புமே என்னால் மறக்க முடியாத விருதாகும்.</p>
<p>தனியார் பள்ளிகளின் மாநில பொதுச்செயலாள ராக உள்ள நீங்கள் பள்ளிக் கல்வி முறையில் மாற்றங்கள் ஏதாவது விரும்புகிறீர்களா?</p>
<p>கல்வி முறையில் அரசு ஏற்கனவே சில மாற்றுத் திட்டங்களை புகுத்தியுள்ளது.  ஆனால் ஆசிரியர்கள் அதனை முழு மனதோடு ஈடுபாட்டோடு செயல்படுத்த முயலவில்லை.   ஆசிரியர்கள் தரப்பில் புதிய திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகக் கூறுகின்றனர்.  இந்நிலைகளைப் பார்க்கும்போது மாணவர் களின் கற்றல் திறனுக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப கற்பித்தல் அமைவது அவசியம். எல்லா மாணவர் கள் மீதும் ஒரே அளவு பாடச் சுமைகள் அளிப்பதுதான் மாணவர்கள் இடை நிற்றல் களுக்குக் காரணம்.  இது குறித்து மிக விரிவான அளவுகள் ஆய்வு செய்து மாற்றங்கள் செய்வது தான் பலன் தரும்.</p>
<p><strong>சமச்சீர் கல்வி பற்றி உங்கள் கருத்து என்ன?</strong></p>
<p>எல்லா மாணவர்களுக்கும் சமமான அளவு கற்றல் திறன் இருப்பதில்லை. கற்றல் திறன் குழந்தைக்குக் குழந்தை மாறுபடுகிறது.  மேலும் எல்லா ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் ஒரே அளவாக இருப்பதில்லை. இந்த அடிப்படை வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் பாடங்கள் என்பது கல்வியில் எந்த அளவு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பது புரியாத புதிர். மேலும் ஆற்றல் உள்ள மாணவர்களின் முன்னேற்றமும் தடைபட வாய்ப்புள்ளது. சமச்சீரான வாழ்க்கை வசதி களையோ ஒரே மாதிரியான அளவில் நாட்டு மக்கள் அனைவரையும் கருதும் இயல்போ உலகில் எங்கும் இல்லை.  எனவே மாணவ ர்களின் கற்றல் திறனுக்கேற்ப பாடத்திட்டங் களில் மாற்றம் இருப்பது தேவைதான்.</p>
<p><strong>உங்கள் நீண்ட கால கனவான IAS, IPSமாணவர் களை உருவாக்குவதில் தற்போதைய முயற்சி பற்றிக் கூறுங்களேன்?</strong></p>
<p>எமது கல்லூரியிலும், ஊத்தங்கரையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு நூலகத்திலும் IAS, IPS பயிற்சிக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கி வருகிறோம்.  மிகக் குறுகிய காலத்தில் எமது பகுதியில் ஒரு சிறந்த பயிற்சி மையம் உருவாக நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.</p>
<p><strong>தாங்கள் செயலராக உள்ள பல்கலைக்கழக சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு (Pasam) குறித்து?</strong></p>
<p>பெரியார் பல்கலைக் கழகத்தில் உள்ள சுயநிதி தனியார் கல்லூரி நிர்வாகிகள் கூட்டமைப்பான பாசம் அமைப்பு 1ணீ ஆண்டு களுக்கு முன் துவக்கப்பட்டது. தனியார் கல்லூரி களின் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்துத் தீர்வுக் காண்பதும் பல்கலைக் கழகத்தின் கல்வித் தர மேம்பாட்டிற்கு உதவுவதும் இவ்வமைப்பின் நோக்கமாகும்.</p>
<p><strong>பெரியார் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை பற்றி கூறுங்கள்?</strong></p>
<p>பெரியார் பல்கலைக்கழகம் துவக்கப் பட்டு 11 ஆண்டுகள் முடிவுற்றுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தின் செயல்பாடு சீரான முன்னேற்றம் பெற்று வருகிறது.  இன்னும்  உயர்வான கல்வித்தரம் அமைய பல்கலைக் கழகத்துடன் இணைந்து பணியாற்றிட பாசம் அமைப்பு தயராக உள்ளது.</p>
<p><strong>கல்வித் துறைமட்டுமல்லாது மருத்துவத் துறையிலும் கால் பதித்து ஊற்றங்கரையில் அரசு மருத்துவமனை சீரமைப்புக்கு உதவியுள்ளீர்கள்? அதைப் பற்றி உங்கள் கருத்து&#8230;?</strong></p>
<p>அரசு மருத்துவமனைக்கு ஊத்தங்கரை யில் சிறந்த கட்டிடத்தைக் கட்டிக் கொடுத் துள்ளது.  அதனை நிர்வகிக்கவும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் போதுமான ஊழியர் களோ அல்லது தேவையான இரசாயனப் பொருட்களோ வழங்கப்படுவதில்லை.  மேலும் போதிய அளவு தண்ணீர் வசதியுமில்லை.  இவற் றிற்கு உதவுவதற்காக ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு நிதி உதவி செய்து மருத்துவமனைக்குத் தேவையான வசதிகள் செய்து தர முனைந்துள்ளோம்.</p>
<p><strong>வளர்ந்த நகரங்களிலும் இல்லாத மின்னணு நூலகத்தை ((E-Library) அரும்பாடுபட்டு ஊற்றங் கரையில் கொண்டு வந்துள்ளீர்கள். அதன் அனுபவங்கள் குறித்து கூறுங்கள்?</strong></p>
<p>அரசின் நோக்கமே நகர்ப்புறமக்கள் பெரும் அனைத்து வசதிகளும் கிராமப்புற மக்களும் பெறவேண்டும் என்பதுதான்.  அந்த அடிப்படையில் கணினி வழி கிடைக்கும் இண்டர்நெட் மூலம் பெற இயலும் கல்வி மற்றும் தகவல் தொகுப்புகளை அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்களும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஊத்தங்கரை அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் களைத் திரட்டி மின்னணு நூலகம் அமைக்க முற்பட்டபோது ஊத்தங்கரை பள்ளியில் பயின்ற பழைய மாணவர் திரு. ஏ. செல்வராஜ் அவர்கள் கர்நாடக மாநிலம் தும்கூரில் சன்மினரல்ஸ் என்ற குழுமத்தை நடத்தி வருகிறார்.  அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் இருபது இலட்சம் அளித்து கட்டிடப் பணியைத் துவக்கி வைத்தார்கள். அதேபோல் பல பழைய மாணவர்களும் வேறு கொடையாளர்களும் வழங்கிய நிதியைக் கொண்டுதான் மின்னணு நூலகம் அமைக்கப்பட்டது.  எவ்வளவு சிறிய கிராமம் ஆனாலும் தமிழ் மக்கள் நல்ல காரியங் கள் செய்வதற்கு நிதி வழங்கத் தவறுவதில்லை என்பது எங்களுக்கு ஒரு இனிய அனுபவம்.</p>
<p><strong>வளர்ந்து வரும் கல்வி நிறுவனங்களுக்கு நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?</strong></p>
<p>வளர்ந்து வரும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களிடம் பயிலும் ஒவ்வொரு மாணவனும் வாழ்வில் உயர நேர்மையான வழியில் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அவ்வாறு தனித்தனி இளைஞனும், இளைஞயும் முன்னேற்றம் கண்டால் இந்தியா அனைத்து வசதிகளும் கொண்ட வல்லரசாக விரைவில் மலரும்.</p>
<p><strong>பள்ளி, கல்லூரியில் ஏழை எளிய மாணவர் களுக்குக் கல்வி ஊக்கத் தொகை அளித்து வரும் நீங்கள் முதல் மதிப்பெண் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர் களுக்கும், அதற்காக உழைக்கும் ஆசிரியர் களுக்கும் தங்கக் காசுகள் வழங்கி ஊக்குவிக் கிறீர்கள் அதைப் பற்றி கூறுங்கள்?</strong></p>
<p>ஒரு பள்ளியோ, கல்லூரியோ அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் கடின உழைப்பால் தான் உயர்வடைகிறது. அந்த வகையில் அவர்களுக்கு ஓரளவு நிறைவான ஊதியம் அளித்தாலும் கூட அவர்களின் ஒவ்வொரு ஆண்டுச் சாதனைகளையும் போற்றிப் பாராட்டும் வண்ணம் தங்கக் காசுகள் பரிசளிக்கப்படுகிறது. அதனால் அதனைப் பெறும் ஆசிரியர்கள் மேலும் கடினமாக உழைத்து இன்னும் சிறந்த சாதனைகளைச் செய்ய வேண்டும் என உள்ளுணர்வு பெறுகிறார்கள்.</p>
<p><strong>பள்ளி கல்லூரி அளவில் பல்வேறு சாதனைகள் படைத்து மாநில, மாவட்ட அளவில் பதவி வகித்து வரும் தாங்களின் மன அமைதிக்காக நேரத்தை செலவிடுகிறீர்களா?</strong></p>
<p>மன அமைதி என்பதே ஆண்டுதோறும் இங்கு பயிலும் மாணவர்களின் சாதனைகளால் பெறுவதுதான். எனவே அதற்காக வேறு தனியான நேரம் எதுவும் ஒதுக்கப்படுவதில்லை.</p>
<p><strong>மாணவர்களின் வேலை வாய்ப்புக்காக அளிக்கும் பயிற்சிகள் பற்றிக் கூறுங்கள்?</strong></p>
<p>மாணவர்கள் வெறும் பொதுக்கல்வி பெறுவதால் மட்டும் வேலை வாய்ப்பைப் பெற இயலுவதில்லை. எனவே எமது கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறோம். இது மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையுணர்வை அளிக்கிறது.</p>
<p><strong>இந்தியாவை வளர்ந்த நாடாக்க நமது இளைஞர் களின் பங்களிப்பு எந்த விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?</strong></p>
<p>ஒவ்வொரு இளைஞரும் தனக்கெனத் தன்னால் முடிந்த தனக்கு ஆர்வமுள்ள ஒரு துறையைத் தேர்வு செய்து அதில் இறுதிவரை இடைவிடாது முயன்று வெற்றி பெறும்போது இந்தியா தானாகவே வெற்றிப் பாதையில் நடைபோடும்;. தனிமனித முன்னேற்றம் நாட்டு முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதை உறுதியுடன் உணர்த்துவது இளைஞர்களின் இன்றைய பொறுப்பாகும்.</p>
<p><strong>தாளாளர், நிறுவனர், செயலர் (பாசம்), பொதுச் செயலர், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, பொதுச் சேவை இன்னும் பிறபதவிகளில் இருந்துக் கொண்டு எப்படி ஒவ்வொரு மாணவரின் தேர்வு தாட்களையும் நேரடி பார்வை செய்கிறீர்கள்.  அதைப் பற்றிச் சொல்லுங்கள்?</strong></p>
<p>நான் அடிப்படையில் ஒரு ஆசிரியன் எனவே எனது எந்த ஒரு பணியையும் விட மேலானதாக நான் கருதுவது மாணவர்களின் தேர்வு விடைத்தாட்களைப் பார்ப்பதுதான்.  ஒவ்வொரு விடைத்தாளும் ஒரு குடும்பத்தின் கதையை பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களுக்காகச் செய்து வரும் தியாகத்தை உணர்த்து கிறது. அதுவன்றி மாணவர்களின் ஆற்றல் அளப்பரியது என்பதை விடைத்தாளைப் பார்க்கும் போது உணரலாம்.  மொத்தத்தில் மாணவர்களின் விடைத்தாட்களை உடனுக் குடன் பார்ப்பது எனக்கு அளவற்ற ஊக்கத்தை அளிப்பதுடன், இப்பணியை மேலும் மேலும் தொடர்ந்து செய்யத் தேவையான உற்சாகத்தை எனக்களிக்கிறது.  சுருங்கச் சொன்னால் விடைத்தாள் பார்ப்பது எனக்கு ஹெல்த்-டானிக்</p>
<p><strong>&#8216;சிறந்த வெற்றியாளராக&#8217; ஒருவருக்கு அவசியம் இருக்க வேண்டியது?</strong></p>
<p>வெற்றியாளர்களுக்கு அவசியம் இருக்க வேண்டியது</p>
<p>1.         தொய்வில்லாத உழைப்பு</p>
<p>2.         பிறருக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பண்பு</p>
<p>3.         உடன்வரும் அனைவரையும் பாரபட்சமின்றி மதிக்கும், நடத்தும் பண்பு.</p>
<p>4.         அனைவரின் உழைப்பாலும் கிடைக்கும் செல்வத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பது.</p>
<p>5.         இடைவிடாத உற்சாகம்.</p>
<p>6.         தோல்விக்கான பொறுப்பை தாமே ஏற்பது.</p>
<p>7.         தம்மை எதிர்ப்பவரையும் எதிர்ப்பின் காரணம் கருதி அரவணைத்துச் செல்ல முயலுதல்.</p>
<p>8.         உடன் பணிபுரிபவர்கள் உற்சாகம் குன்றும் போது அவர்கள் மனநிலை அறிந்து குறை போக்கி அவர்களை மீண்டும் உற்சாகம் கொள்ளச் செய்வது.</p>
<p>9.         எத்தகைய பாராட்டுகள் வந்தாலும் அதற்குக் காரணம் உடன்; பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பே என்பதை உணர்ந்து பாராட்டு களை அனைவருக்கும் பொதுவாக்குவது.</p>
<p>10.       மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்துடன் செயலாற்றுகின்ற நேரமறிந்து செய்கிற பண்பு.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3735/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற&#8230;</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3734/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3734/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 06:37:09 +0000</pubDate>
		<dc:creator>பரமஹம்ச நித்யானந்தர்</dc:creator>
				<category><![CDATA[Articles]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3734</guid>
		<description><![CDATA[தலைவராகுங்கள் இளைஞர்களே&#8230; 
	பில்கேட்ஸ்-ஐ உலகின் முதல் பணக்காரராக்கியது சாஃப்ட்வேர் நிறுவனம் 		அல்ல. அதை உருவாக்கக் காரணமாக இருந்த அவரின் &#8216;புதிதசாலித்தனமும்&#8217; (Intelligence), &#8216;தலைமைப் பண்பும்&#8217; தான் (Leadership) அவர் வெற்றியின் இரகிசயம்.
	அமெரிககாவில் பிறக்காமல் ஆப்பரிக் காவில் பிறந்திருந்தாலும், பில்கேட்ஸ் சாதித்திருப்பார். அவரிடமுள்ள அளப்பரிய தலைமைப் பண்பும் அவரை வேறு ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வைத்திருக்கும்.
	தலைமைப் பண்பு சும்மா காரியமல்ல.
	அது ஒரு மாபெரும் குணம்!
	மிகவும் பிரபலமான சீனப் பழமொழி ஒன்று.
	&#8220;சாதிப்பவர்கள் தலைவர்.
	சாதிக்காதவர்கள் வேலைக்காரர்கள்.&#8221;
	ஒரு மனிதரின் தலையெழுத்தையே திருத்தி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>தலைவராகுங்கள் இளைஞர்களே&#8230; </strong></p>
<p>	பில்கேட்ஸ்-ஐ உலகின் முதல் பணக்காரராக்கியது சாஃப்ட்வேர் நிறுவனம் 		அல்ல. அதை உருவாக்கக் காரணமாக இருந்த அவரின் &#8216;புதிதசாலித்தனமும்&#8217; (Intelligence), &#8216;தலைமைப் பண்பும்&#8217; தான் (Leadership) அவர் வெற்றியின் இரகிசயம்.<span id="more-3734"></span><br />
	அமெரிககாவில் பிறக்காமல் ஆப்பரிக் காவில் பிறந்திருந்தாலும், பில்கேட்ஸ் சாதித்திருப்பார். அவரிடமுள்ள அளப்பரிய தலைமைப் பண்பும் அவரை வேறு ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வைத்திருக்கும்.<br />
	தலைமைப் பண்பு சும்மா காரியமல்ல.<br />
	அது ஒரு மாபெரும் குணம்!<br />
	மிகவும் பிரபலமான சீனப் பழமொழி ஒன்று.<br />
	&#8220;சாதிப்பவர்கள் தலைவர்.<br />
	சாதிக்காதவர்கள் வேலைக்காரர்கள்.&#8221;<br />
	ஒரு மனிதரின் தலையெழுத்தையே திருத்தி எழுதும் சக்தி படைத்தது. இந்தத் தலைமைப் பண்பு (Leadership Quality)<br />
	Dr.A, Dr.B ஆகிய இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள். ஒரே நகரில் கிளினிக் வைத்து மருத்துவம் செய்ய<br />
ஆரம்பித்தவர்கள். இருவரும் நடுத்தரக் குடும்பத் தில் பிறந்தவர்கள்.<br />
	Dr.A, பதினைந்து வருடமாகக் கிளினிக் நடத்தி வருகிறவர். அவருடைய சிறிய கிளினிக்கில் எப்போதும் கும்பல் அலை மோதிக் கொண்டேயிருக்கும். அதே பதினைந்து வருடத்திற்குள், மூன்று மாடிக் கட்டிடத்தோடு கூடிய மருத்துவமனை ஒன்றையே கட்டிவிட்டு விட்டார்.<br />
	Dr.A, Dr.B  இருவரும் ஒரு கல்லூரியில், ஒரே படிப்பை படித்தவர்கள் தான். Dr.A  வைப் போல அந்த மற்றோர் இளைஞரும் முன்னேற வேண்டுமானால், என்ன விதமான வாழ்க்கை விதிகளைத் (Rules for Good Life) தர விரும்புகிறீர்கள்?&#8230; என்று ஒருவர் கேட்டார்.<br />
	&#8220;No rules in the rule&#8221;.<br />
	வாழ மதிதான் வேண்டுமேயன்றி, விதி அல்ல. மதி குறைந்த மனிதர்கள், மனிதக் கூட்டத்தைப் பாங்காய்க் கட்டுப்படுத்தத் தெரியாததால், கண்டுபிடித்ததே விதிகள், நீதி நெறிகள், ஒழுக்கங்கள்.<br />
	ஓர் இளைஞருக்கு மதியைத் தந்து, அவரை அசகாய சூரராக மாற்ற வேண்டுமே யன்றி, அவருக்கு விதிகளைப்போட்டு, அவரைச் சுருக்கி, அவர் சுதந்திரத்தைப் பறித்து, அவரை அசுரராகவோ, சாபமாகவோ மாற்றக் கூடாது.<br />
	அந்த இரண்டு டாக்டர்களுமே இருவருமே படுபிசியாக இருக்கிறார்கள், கடுமை யாக உழைக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் மருத்துவமனை ஒன்றைக் கட்டிவிட்டார். அவரால் மட்டும் சாதிக்க முடிந்தது எப்படி? அவருக்கும் அதே மருத்துவப்படிப்பு, அதே நோயாளிகள், அதே மருந்துகள்தான் மூலதனம்.<br />
	சிறு கிளினிக்கை உருவாக்கக் கூடிய அதே மூலதனத்தைக் கொண்டு, இன்னொருவர் பெரிய மருத்துவமனையை உருவாக்கியது எப்படி?<br />
	Dr.A யிடம் எது அதிகமாக இருந்தது?<br />
	இந்த எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில் &#8230;<br />
	கடவுளைவிடப் பெரிய தலைவனில்லை &#8230;..<br />
	தலைமைப் பண்பு மலர மலரக் கடவுளைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறீர்கள். அப்பண்பு முழுமையாகும்போது, கிருஷ்ணரைப் போன்று, சிவனைப்போன்று, புத்தரைப் போன்று, கடவுளாகவே மாறிவிடுவார்கள்.<br />
	விவேகானந்தர் ஓரிடத்தில் மிக அழகாகச் சொல்கிறார்&#8230; &#8220;ஞானிகள் சொன்ன ஏதாவது ஐந்து ஞானக் கருத்துக்களை வாழ்வில் முழுமை யாய் கடைப்பிடியுங்கள். அது, மிகப்பெரிய நூலகத்தின் நூல்களையெல்லாம் படித்து முடித்த ஒரு அறிவாளியின் அனுபவத்தைத் தாண்டிய அனுபவத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும்&#8221;.<br />
	உங்களை மிகப்பெரிய சாதனையாளராக மாற்றவல்ல தலைமைப் பண்பை, நூல்களில் படித்துக் கற்றுக் கொள்ள முடியாது. நூலகத் தையே கரைத்துக் குடித்தாலும் அறிவு மட்டும் தான் வளருமேயன்றி, தலைமைப் பண்பு வளராது.<br />
	விவேகானந்தரை உலகமெல்லாம் போற்றும் மனிதராக்கியது, அவரின் தலைமைப் பண்புதான். இராமகிருஷ்ணரிடமிருந்து அவர் கற்றுக் கொண்ட தியானங்களும், அவை அவருக்குள் செய்த இரஸவாதங்களும் தான், சிகாகோ வரைஅவரை உயர்த்தியது.<br />
	நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் சரி, அதைப் பற்றி கவலையே படாதீர்கள்.<br />
	என்னாலெல்லாம் சாதிக்க முடியுமா? நான் பெரிய ஆளாவேனா? எனக்குத் தகுதியிருக் கிறதா?<br />
	என்றெல்லாம் தயங்குவதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.<br />
	எல்லா ஆல விதைக்குள்ளும் ஆலமரம் ஒளிந்திருக்கிறது.<br />
	எல்லா இளைஞருக்குள்ளும் ஒரு மாபெரும் சாதனையாளர் ஒளிந்திருக்கிறார்.<br />
	விதை மரமாக, இளஞ்சூடும் ஊட்டச் சத்தும் தேவை. மனிதர் சாதனையாளராக, சக்தியும் புத்தியும் தேவை.<br />
	சக்தியை தியானமும் புத்தியை ஞானி களின் வாழ்வியல் கருத்துக்களும் தரவல்லவை.<br />
	சக்தியும், புத்தியும் பெருகப் பெருக, தலைமைப் பண்பு ஒருவருக்குள் எளிதில் மலர்ந்துவிடும். ஒரு தலைவர், கோடீஸ்வரர் களுக்குச் சமம்.<br />
	தலைமைப் பண்பு மிகுந்த ஒருவரால்தான் கோடீஸ்வரராக முடியும்.<br />
	ஒவ்வொரு ரூபாயாகப் பிச்சை எடுத்துக் கோடீஸ்வரரான யாராவது ஒருவரை இதுவரை பார்த்திருக்கிறீர்களா.. இப்படி கோடீஸ்வரராவது சாத்தியமேயில்லாத ஒன்று. சாதனையின் உச்சம் தொட, அறிவின் உச்சம் தொட வேண்டிய தில்லை.<br />
	சாதிக்கச் சக்தியும் புத்தியும் தான் பெருக வேண்டும். தலைமைப் பண்பின் உச்சத்தைத்தான் தொடவேண்டும்.<br />
	புத்தர் உள்ளுலக சாதனையாளர்!<br />
	பில்கேட்ஸ் வெளியுலக சாதனையாளர்!<br />
	இருவருமே சாதனையின் உச்சம்!<br />
	நீங்கள் சாதிக்க விரும்புவது உள்ளுலகிலா, இல்லை வெளியுலகிலா?<br />
	உங்களின் பதில் எதுவாயிருந்தாலும்&#8230; சாதனை நிகழ்வதற்கான மூலதனம் தலைமைப் பண்பு மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதைப் பெருக்குங்கள். நீங்கள் சாதனையாளராவது உறுதி செய்யப்பட்டு விட்டது. தலைவராகுங்கள்&#8230; உலகம் உங்கள் கையில்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3734/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உள்ளத்தோடு உள்ளம்</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3733/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3733/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 06:34:14 +0000</pubDate>
		<dc:creator>ஆசிரியர் குழு</dc:creator>
				<category><![CDATA[Editorial]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3733</guid>
		<description><![CDATA[	உபயோகமற்ற எண்ணங்களை அகற்றி, நினைத்ததை 	நடத்திக் காட்டும் உறுதியான எண்ணங்களை உள்ளம் முழுவதும் நிரப்பி மாணவ மாணவிகள் தேர்வை சந்திக்கும் காலம்.
	நிழல் போல கஷ்டங்கள் உடன் வந்து கொண்டிருந்தாலும் பிள்ளையைப் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி அழகு     பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் தன்னை பல வகையிலும் வருத்திக்கொண்டு வாழும் பெற்றோர்களே நம் நாட்டில் அநேகம்.
	அன்பு மாணவர்களே&#8230; தவறியும் தவறான பாதைகளில், சிந்தனைகளில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் கல்வியில் மட்டுமே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>	உபயோகமற்ற எண்ணங்களை அகற்றி, நினைத்ததை 	நடத்திக் காட்டும் உறுதியான எண்ணங்களை உள்ளம் முழுவதும் நிரப்பி மாணவ மாணவிகள் தேர்வை சந்திக்கும் காலம்.<br />
	நிழல் போல கஷ்டங்கள் உடன் வந்து கொண்டிருந்தாலும் பிள்ளையைப் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி அழகு     <span id="more-3733"></span>பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் தன்னை பல வகையிலும் வருத்திக்கொண்டு வாழும் பெற்றோர்களே நம் நாட்டில் அநேகம்.<br />
	அன்பு மாணவர்களே&#8230; தவறியும் தவறான பாதைகளில், சிந்தனைகளில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் கல்வியில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி சாதிக்கும் வல்லமையை வெளிப்படுத்துபவர்களாக தேர்வை சந்தியுங்கள்! மதிப்பெண் களில் மட்டும் நீங்கள் பெறுவது முதலிடம் அல்ல&#8230;<br />
	பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில், நாளைய நல்உலகத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தில் இப்படி யாவிலும் நீங்கள் முதலிடம் பெற்றவர் ஆகுகிறீர்கள்&#8230;<br />
	யாவையும் கடந்து நீங்கள் சாதிப்பீர்கள் என்கிற நம்பிக்கையை இம்மியளவும் ஏமாற்றாமல் &#8216;சிகரம்&#8217; தொட்டு நிற்க வாழ்த்தி மகிழ்கிறோம்.</p>
<p>அன்புடன்,<br />
	ஆசிரியர் குழு</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3733/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுயமுன்னேற்றப் பயிலரங்கம்</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3732/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3732/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 06:30:29 +0000</pubDate>
		<dc:creator>ஆசிரியர் குழு</dc:creator>
				<category><![CDATA[events]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3732</guid>
		<description><![CDATA[[ March 26, 2010; 2:00 pm; ] கோபியில்...

தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக்
பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் 

நாள்	: 26.03.2010, வெள்ளிக்கிழமை
நேரம் 	: மதியம் 2.00 மணி
இடம் 	:	ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் 		பொறியியல் கல்லூரி, கலைவாணி
நகர், ஒத்தக்குதிரை, கோபி.

தலைப்பு :
புறப்படு புயலென!
பயிற்சியளிப்பவர் :
திரு. K.M. கைலாசம், B.A., L.L.B.

வழக்குரைநர், கோபி

தொடர்புக்கு : M.. நம்பிராஜன், மக்கள் தொடர்பு அலுவலர்,
தன்னம்பிகை மாத இதழ், செல்: 94422 34008
போன்: (04285) 266188, 266199.

இந்நிகழ்ச்சியை
வழங்குபவர் : அன்பு தங்க மாளிகை A/c,

கோபி போன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table class="ec3_schedule"><tr><td colspan="3">March 26, 2010</td></tr><tr><td colspan="3">2:00 pm</td></tr></table><p><strong>கோபியில்&#8230;</strong></p>
<p>தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக்<br />
பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் <span id="more-3732"></span></p>
<p>நாள்	: 26.03.2010, வெள்ளிக்கிழமை<br />
நேரம் 	: மதியம் 2.00 மணி<br />
இடம் 	:	ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் 		பொறியியல் கல்லூரி, கலைவாணி<br />
நகர், ஒத்தக்குதிரை, கோபி.</p>
<p>தலைப்பு :<br />
புறப்படு புயலென!<br />
பயிற்சியளிப்பவர் :<br />
திரு. K.M. கைலாசம், B.A., L.L.B.</p>
<p>வழக்குரைநர், கோபி</p>
<p>தொடர்புக்கு : M.. நம்பிராஜன், மக்கள் தொடர்பு அலுவலர்,<br />
தன்னம்பிகை மாத இதழ், செல்: 94422 34008<br />
போன்: (04285) 266188, 266199.</p>
<p>இந்நிகழ்ச்சியை<br />
வழங்குபவர் : அன்பு தங்க மாளிகை A/c,</p>
<p>கோபி போன் : 04285 &#8211; 229480, 229490</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3732/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>115வது மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம்</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3731/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3731/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 06:28:35 +0000</pubDate>
		<dc:creator>ஆசிரியர் குழு</dc:creator>
				<category><![CDATA[events]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3731</guid>
		<description><![CDATA[[ March 28, 2010; 10:00 am to 1:00 pm. ] ஈரோட்டில்...


நாள்	: 28.03.2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம் 	: காலை 10 மணி முதல் 
		1 மணி வரை
இடம் 	:	ஈரோடு சிவில் எஞ்சினியர்ஸ் 			டிரஸ்ட் பில்டிங், A/C ஹால், 
		பழைய R.T.O. ஆபீஸ் அருகில், பழைய 			பாளையம், பெருந்துறை ரோடு, ஈரோடு. 

தலைப்பு :இன்பமே தரும் இனிய செயல்கள்
பயிற்சியளிப்பவர் : 'மனோசக்தி' ந. மாசிலாமணி

தொடர்புக்கு : திரு. சிவ குணசேகர் - 98427 69636 திரு. C. இராசேந்திரன் - 94433 59557  திரு. ஓ. சிவசுப்பிரமணியம் - 94422 [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table class="ec3_schedule"><tr><td colspan="3">March 28, 2010</td></tr><tr><td class="ec3_start">10:00 am</td><td class="ec3_to">to</td><td class="ec3_end">1:00 pm</td></tr></table><p><strong>ஈரோட்டில்&#8230;</strong></p>
<p>நாள்	: 28.03.2010, ஞாயிற்றுக்கிழமை<br />
நேரம் 	: காலை 10 மணி முதல்<br />
		1 மணி வரை<br />
இடம் 	:	ஈரோடு சிவில் எஞ்சினியர்ஸ் <span id="more-3731"></span>			டிரஸ்ட் பில்டிங், A/C ஹால்,<br />
		பழைய R.T.O. ஆபீஸ் அருகில், பழைய 			பாளையம், பெருந்துறை ரோடு, ஈரோடு. </p>
<p>தலைப்பு :<strong>இன்பமே தரும் இனிய செயல்கள்</strong><br />
பயிற்சியளிப்பவர் : <strong>&#8216;மனோசக்தி&#8217; ந. மாசிலாமணி</strong></p>
<p>தொடர்புக்கு : திரு. சிவ குணசேகர் &#8211; 98427 69636 திரு. C. இராசேந்திரன் &#8211; 94433 59557  திரு. ஓ. சிவசுப்பிரமணியம் &#8211; 94422 26622 </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3731/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுயமுன்னேற்றப் பயிலரங்கம்</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3729/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3729/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 06:24:46 +0000</pubDate>
		<dc:creator>ஆசிரியர் குழு</dc:creator>
				<category><![CDATA[events]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3729</guid>
		<description><![CDATA[[ March 10, 2010; 10:00 am to 1:00 pm. ] மதுரையில்...

நாள்	: 21.03.2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம்	:	காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் :	தன்னம்பிக்கை பயிற்சி மையம், 
		42/20, சிபி பவுண்டேசன், 
		மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்,
		தபால் தந்தி நகர் ரோடு, பிரம்மகுமாரிகள்
		மடம் எதிர்புறம், மதுரை-17.

தலைப்பு : வாழ்க்கையில் கற்க! 
வாழ்வியல் பயில்க!!
பயிற்சியளிப்பவர் : திரு.  K.K.தினேஷ் B.B.A., M.Com.,

தொடர்புக்கு : கவிஞர் இரா. இரவி - 98421 93103 
திரு எ.எஸ். இராஜராஜன் - 94422 67647  திரு. திருச்சி. சந்தர் - 94437 [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table class="ec3_schedule"><tr><td colspan="3">March 10, 2010</td></tr><tr><td class="ec3_start">10:00 am</td><td class="ec3_to">to</td><td class="ec3_end">1:00 pm</td></tr></table><p><strong>மதுரையில்&#8230;</strong></p>
<p>நாள்	: 21.03.2010, ஞாயிற்றுக்கிழமை<br />
நேரம்	:	காலை 10 மணி முதல் 1 மணி வரை<br />
இடம் :	தன்னம்பிக்கை பயிற்சி மையம்,<br />
		42/20, சிபி பவுண்டேசன், <span id="more-3729"></span><br />
		மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்,<br />
		தபால் தந்தி நகர் ரோடு, பிரம்மகுமாரிகள்<br />
		மடம் எதிர்புறம், மதுரை-17.</p>
<p>தலைப்பு : <strong>வாழ்க்கையில் கற்க! </strong><br />
வாழ்வியல் பயில்க!!<br />
பயிற்சியளிப்பவர் : <strong>திரு.  K.K.தினேஷ் B.B.A., M.Com.,</strong></p>
<p>தொடர்புக்கு : கவிஞர் இரா. இரவி &#8211; 98421 93103<br />
திரு எ.எஸ். இராஜராஜன் &#8211; 94422 67647  திரு. திருச்சி. சந்தர் &#8211; 94437 43524</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3729/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுயமுன்னேற்றப் பயிலரங்கம்</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3728/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3728/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 06:20:46 +0000</pubDate>
		<dc:creator>ஆசிரியர் குழு</dc:creator>
				<category><![CDATA[events]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3728</guid>
		<description><![CDATA[[ March 28, 2010; 5:00 pm; ] கோவையில்...

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட், ஸ்டார் ஜெராக்ஸ் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் 


நாள்	: 21.03.2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம் 	: மாலை 5 மணி முதல் 
இடம் 	:	இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட் 
		139/86, மேற்கு சம்பந்தம் சாலை
		ஆர்.எஸ்.புரம் (மேற்கு), பெண்கள்
		மேல்நிலைப்பள்ளி எதிரில், கோவை. 

தலைப்பு : நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்!
சிறப்பு பயிற்சியாளர் : சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள்
ஆசிரியர், ஸ்ரீ வாராகி விஜயம் ஆன்மிக இதழ்
ஸ்ரீ வாராகி மந்தராலயம், கோவை

செயலர் : [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table class="ec3_schedule"><tr><td colspan="3">March 28, 2010</td></tr><tr><td colspan="3">5:00 pm</td></tr></table><p><strong>கோவையில்&#8230;</strong></p>
<p>தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட், ஸ்டார் ஜெராக்ஸ் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்<br />
<span id="more-3728"></span></p>
<p>நாள்	: 21.03.2010, ஞாயிற்றுக்கிழமை<br />
நேரம் 	: மாலை 5 மணி முதல்<br />
இடம் 	:	இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்<br />
		139/86, மேற்கு சம்பந்தம் சாலை<br />
		ஆர்.எஸ்.புரம் (மேற்கு), பெண்கள்<br />
		மேல்நிலைப்பள்ளி எதிரில், கோவை. </p>
<p>தலைப்பு : <strong>நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்!</strong><br />
சிறப்பு பயிற்சியாளர் : <strong>சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள்</strong><br />
ஆசிரியர், ஸ்ரீ வாராகி விஜயம் ஆன்மிக இதழ்<br />
ஸ்ரீ வாராகி மந்தராலயம், கோவை</p>
<p>செயலர் : ம. ஒட்டக்கூத்தன் 98421 12666<br />
தலைவர் : A.G. . மாரிமுத்துராஜ் 98422 59335 தன்னம்பிக்கை அலுவலகம் : 98422 32550</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3728/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இங்கிலாந்து சுற்றுப்பயணம்</title>
		<link>http://www.thannambikkai.net/2010/03/01/3764/</link>
		<comments>http://www.thannambikkai.net/2010/03/01/3764/#comments</comments>
		<pubDate>Mon, 01 Mar 2010 10:53:36 +0000</pubDate>
		<dc:creator>Jc. S.M. பன்னீர் செல்வம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://www.thannambikkai.net/?p=3764</guid>
		<description><![CDATA[பக்கிங்ஹாம் அரண்மனை முன்புறம்
நாள்தோறும் திருவிழா போல் பல நாட்டுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.  அரண்மனைக்கு எதிரில் 40&#8242; தொலைவில் நினைவுச் சின்னம் போன்றமேடையும் அதன் உச்சியில் வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பமும் உள்ளன.  அதைச் சுற்றி அகழி போன்றஅமைப்பில் நீர்நிலை உள்ளது.  அதன் மீது மக்கள் அமர்ந்தும் நின்றும் அரண்மனையைப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
தினமும் பணிமாற்றம் (Guard Change) என்னும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடை பெறுகிறது.  குதிரை வீரர்கள், டிரம் வாசிப்போர், காவல் வீரர்கள், அலுவலகப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>பக்கிங்ஹாம் அரண்மனை முன்புறம்</strong></p>
<p>நாள்தோறும் திருவிழா போல் பல நாட்டுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.  அரண்மனைக்கு எதிரில் 40&#8242; தொலைவில் நினைவுச் சின்னம் போன்றமேடையும் அதன் உச்சியில் வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பமும் உள்ளன.  அதைச் சுற்றி அகழி போன்றஅமைப்பில் <span id="more-3764"></span>நீர்நிலை உள்ளது.  அதன் மீது மக்கள் அமர்ந்தும் நின்றும் அரண்மனையைப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.</p>
<p>தினமும் பணிமாற்றம் (Guard Change) என்னும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடை பெறுகிறது.  குதிரை வீரர்கள், டிரம் வாசிப்போர், காவல் வீரர்கள், அலுவலகப் பணியாளர்கள் எனச் சீருடையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அணிவகுத்து வருகின்றனர்.  இவர்கள் அரண்மனையின் இரும்பு காம்பவுண்டுக்குள் சென்று, பணி முடித்தோரிடம் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.  பணி முடித்தோர் அதே போல அணி வகுத்து வெளியேறுகின்றனர்.</p>
<p>வண்ண வண்ணச் சீருடைகள், மனதை மயக்கும் இசையொலிகள், கம்பீரமான தோற்றம் மிடுக்கான நடை என மிகவும் பயிற்சி பெற்று இந்த காட்சியை நடத்துகின்றனர்.  பல நாட்டுப் பயணிகளும் பார்த்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thannambikkai.net/2010/03/01/3764/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
