கவிதைகள்
Author: ஆசிரியர் குழு
|
வெற்றி நிச்சயம்
கவிஞர் ஞானசித்தன்
உன்
கண்ணாடி மனதில்
கவலைகளெனும் தூசி
படியாமல் பார்த்துக்கொள்
உன்
இரும்பு நெஞ்சத்தில்
சோம்பலெனும் துரு
பிடிக்காமல் பார்த்துக்கொள்
உன்
தெளிந்த சிந்தனை ஓட்டத்தில்
எதிர்மறைஎண்ணங்களான
பாசி படராமல் பார்த்துக்கொள்
உன்
வெள்ளை மனதில்
கர்வமெனும் கறைசேராமல்
பார்த்துக்கொள்
சோம்பலை சாம்பலாக்கு
அலைபாயும் மனதை அடக்கு
முடங்கி கிடக்கும்
உன் திறமையை முடுக்கிவிடு
கட்டிக்கிடக்கும்
உன் ஆற்றலை கட்டவிழ்த்து விடு
வெற்றி நிச்சயம்
தன்னம்பிக்கை
கசந்துபோன என் வாழ்க்கையில்
பாலைவனம் ஆன என் மனதை
சோலைவனமாக மாற்றுவதற்கு
கைவசம் என்னிடம்
தன்னம்பிக்கை மட்டுமே…
புன்செய் கவி எஸ். விஜயகுமார்
புன்செய்புளியம் பட்டி
வாழ்வோம் சாதிப்போம்
கு. சுப்பிரமணியன்
அந்தியூர், ஈரோடு மாவட்டம்
தோழாÐ துள்ளி எழு
விடியலை நோக்கி
இறக்காத இந்த நாளில்
வாழ்க்கையை வாழப்பார்
பிறக்காத நாளையும்
திரும்பாத நேற்றும்
வேண்டாம்
வாழ்க்கை தான்
ஆனந்தத்தின் விளைச்சல்
அற்புதங்களின் புகலிடம்
அனுபவங்களின் பாதை
மாற்றங்களின் சோலை
சூழ்நிலைகளின் நூலகம்
வார்த்தைகளின் நீர்வீழ்ச்சி
செயல்களின் பிம்பம்
பார்வைகளின் கொண்டாட்டம்
வாழ்வோம்Ð சாதிப்போம்
புதுமைப் பெண்ணே
புதுமைப் பெண்ணேÐ உன்னை
உலகம் அறிய பூக்கோலம் போதாதுÐ
போட்டியில் வென்றுவிட
வெளி உலகம் அறிந்திடுÐ
விடாமுயற்சியும், உழைப்பையும்
இரு சிறகுகளாக மாற்றிடுÐ
மழைநீர் வடிந்து பூமி குளிர்வது
போல வாழும் வழியை வசப்படுத்துÐ
வையத் தலைமை கொள்ள
வானம் தாண்டி யோசிÐ
யோகம் என்பது ஜாதகத்திலில்லை
முன்னேறஅது பாதகம் என்றிடுÐ
எடுத்த செயல்முடியும் போது
அடுத்த செயலுக்கு தொடக்கம் தேடுÐ
தேடுதல் என்பதற்கு முடிவில்லை
முடிவிற்காக தேடுவதை நிறுத்தாதேÐ
நீ உன்னை நம்பு
வானம் ஒருநாள் வசப்படும்Ð
தேசியக்கொடி
ப. நரசிம்மன், பி.இ.,
உதவிப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை
பாப்பிரெட்டிபட்டி ,தருமபுரி மாவட்டம்
சுதந்திர தேசத்தின்
சுவாசக் காற்றாய்
உயரப் பறக்கும்
உன்னதக் கொடி
தேசம் போற்றும்
தேசியக்கொடி
மூவித வண்ணத்தில்
பறக்கும் கொடி
சிவப்பு வண்ணம்
தியாகத்தின் சின்னம்
விடுதலைப் போரின்
வீரர்தம் தியாகம்
பச்சை வண்ணப்
பாங்கை உணர்வோம்
பசுமை நிறைந்திட
மரங்கள் நடுவோம்
வெள்ளை வண்ணத்
தூய்மை அறிவோம்
உள்ளத் தூய்மை
அனைவரும் கொள்வோம்
நடுவில் இருக்கும்
அசோகச் சக்கரம்
வாழ்வில் உண்மையை
உணர்த்தும் சக்கரம்
மக்கள் பலவாய்
மொழிகள் பேசினும்
மனதில் ஒற்றுமை
உணர்வுடன் வாழ்வோம்
வாழும் மக்கள்
இனம்வே றெனினும்
பாரத தேசம்
பண்பட வாழ்வோம்
- None Found











