ஒரு பழமொழி உதிர்கிறது
….
என்னுடைய சாதியை
இழிவாகப் பேசினான்……
துடிக்கிறது இரத்தம்!”
துள்ளினான் நண்பன்!

அருகில் இருந்த தோழன்
ஆத்திரத்துடன் கேட்டான்:

விபத்தில் அடிபட்டு
விழுந்து கிடந்தாய்
மரணப் படுக்கையில்……
ஊரே சேர்ந்துனக்கு
உதிரம் கொடுத்தது……

அத்தனை சாதி இரத்தமும்
ஒன்றாய்க் கலந்து
ஓடுகிறது உன் உடம்பில்!

இப்போது சொல்
உனக்குள்
எந்த சாதியின்
இரத்தம் துடிக்கிறது?”